குண்டலினி யோகத்தில் சுழுமுனை நாடி வழியே மூலக் கனலை மேல் நோக்கிச் செலுத்துகிற யோகிக்கு மும் மண்டலங்களும் ஒத்த வகையில் வளரும். அது வளர்ந்தபின் எடுத்த உடல் உலகம் இருக்கும் வரை சீவனை விட்டு நீங்காது என்கிறார் திருமூலர்.
"கொண்ட விரதம் குறையாமல் தான் ஒன்றித்
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் ஊழி பிரியாது இருக்குமே."
என்பது திருமந்திரம்,
முக்குணம் என்கின்ற இருள் நீங்க மூலாதாரத்தில் உள்ள அபானன் என்ற வாயுவை மேலெழுப்பி, வலப் பக்கத்து சூரிய கலையை இடப்பக்கத்து சந்திர கலையுடன் பொருத்தி காலையில் ஒரு நாளிகை நேரம் பயின்றால் உடம்பில் உயிர் அழியாது இருக்க வைப்பன் சிவன், என்கிறார் திருமூலர்.
மும்மண்டலம் :- அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம்.
முக்குணம் :- தாமசம், இராஜசம், சாத்வீகம்.
ஆகவே சித்தர்கள் பல வருடங்கள் உயிர் வாழ்ந்தது இப்படித் தான் என்பது திருமூலர் வாக்கிலிருந்தே தெளிவாகிறது.
Post a Comment



3 comments:
குண்டலினி யோகம் செய்வது எப்படி?
குண்டலினி நரம்பை கட்டுப்படுத்துவது எப்படி?
தோழி! இன்னும் விரிவாகவும்,இன்னும் எளிமையாகவும் இந்த வலைப்பூவை எழுதும்படி வேண்டுகிறேன்.நன்றி www.aanmigakkadal.blogspot.com
மிகவும் அருமை . மேலும் எனக்கு பாம்பாட்டி சித்தர் தத்துவ பாடல்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் , எனக்கு அவருடைய தத்துவ பாடல்கள் மிகவும் பிடிக்கும் .
Post a Comment