"காரமே சூதம்புண்யம் கற்பமாஞ் சாமஞ் சத்து
சூரியப கையாஞ் சாதிரு த்திரன் துள்ளியீசன்
வீரிய ஞ்சூழ்ச்சிநீராம் விண்ணீர் விண்ம ருந்து
சீர்பெறு மிரத மென்று செப்பி னார்ரொப் பிப்லோரே"
என்ற பாடலில் பாதரசத்திற்கு சித்தர்கள் சூட்டியுள மறை குறியீட்டு பேர்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
அவையாவன காரம் , சூதம், புண்ணியம், கற்பம், சாமம், விண்ணீர், வின்மருந்து , இரசம், என்று சொல்லப்பட்டுள்ளது.
இது போன்று பல சித்தர்கள் பாதரசத்தை புகழ்ந்துள்ளனர், அதில் முக்கியமானதாக நாம் எடுத்துக் கொள்வதாயின் மகா சித்தராகிய போகர் தனது சப்தகாண்டம் என்ற நூலில் பாதரசத்தை ஐந்து வகையாகப் பிரிக்கிறார்.. அது...
“ஆறியே சூதமஃ தை ந்துவித மாகும்
அதன் விபர மேதென்னி லறையக் கேளு
ஊறியே ரசமென்றும் இரசேந் திரமென்றும்
உற்றபா ரசமென்றுஞ் சூதமென்றும்
மீறியே மிசர கமென் றைந்து மாச்சு"
சூதம் ஐந்து வகையாச்சு அதன் விபரம் சொல்கிறேன் கேளு, இரசம் என்றும் , ரசேந்திரன் என்றும், பாரதம் என்றும், சூதம் என்றும், மிசரகம் என்றும் ஐந்து வகையாச்சு என்று சொல்கிறார். போகர் இவ்வாறு ஐந்து வகையாக பிரிப்பதற்குக் காரணம் அதன் தன்மைகளை கொண்டே.
இந்த ஐந்து ரசவகைகளின் தன்மைகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.
Post a Comment



5 comments:
பயனுள்ள இடுகைகள், இந்து மதத்தின் அறிய பொக்கிஷங்கள் இவைகள். தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றாக உள்ளது.மேலும் தொடருங்கள்.
அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்...
seyvadharkku yelidhay ulla sidhdha vaithtiya muraikal parrium adhan payan parrium theriviungal. payanperuvom
my father is affected by paralysis. his left side fallen. we use some alopathy medicine along with some oils of ayurvedha. help me to treat him with sidhdhaa
Post a Comment