பாதரசம்....
திடமற்ற திரவ நிலை உலோகமான இது பூமியிலிருந்து கிடைக்கக் கூடிய தாதுப் போருட்களில் ஒன்று. நீர்ச்சத்தும், காற்றும் ஒருங்கே அமையப் பெற்றது இந்தப் பாதரசம்.
பொதுவாக வெண்மை நிறத்துடன் கூடிய பாதரசத்தை நாம் பார்த்திருக்கிறோம். அனால் அதே போன்று சிகப்பு, மஞ்சள், வெளிர் நீலம் என பலவித நிறங்களிலும் உண்டு. ஆனால் இவை அபூர்வமாக கிடைப்பவை. இத்தகைய பாத ரசம் வாத வைத்தியத்தின் கூற்றுப்படி பாஷாண வகைகளில் ஒன்றாக சொல்லப் படுகிறது. பாஷாணப் பண்புகளை உள்ளடக்கி உள்ளதால் இதற்கு "சூதம்" என்று ஒரு பெயரும் சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது.
வைத்தியத்திற்கு இரச பதங்கம், இரச பட்பம், இரச செந்தூரம் என்று பலவழிகளில் பயன்படும் இந்தப் பாதரசத்தை சற்று கடினமான உலோகமாக மாற்றி மணியாகச் செய்து கொள்வதே இரசமணி என்று அழைக்கப்படும். இந்த இரசமணியை உடலில் அணிந்து கொண்டோமானால், அதனால் நாங்கள் அடையும் பலன்கள் அதிகம். பாதரசத்தை மணியாக மாற்றுவது ரசவாதக் கலையின் ஒரு பகுதியே ஆகும். இதில் இருக்கும் நீரையும் காற்றையும் பிரித்தெடுப்பது தான் மிக இரகசியமாக கையாளப்படுவதுடன், மிக இரகசியமாக வைக்கப் பட்டுள்ளது.
இந்த இரசமணியைக் கயிற்றில் கோர்த்து உடலில் அணிந்து கொண்டால், உடலிலுள்ள முப்பிணிகளுக்கும் காரணமான வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை தமது நிலைகளில் சீராக இயங்க வைக்கும். இதனால் இவைசம்பந்தப்பட்ட எந்த நோயும் உடலைத்தாக்காது பாதுகாக்கும்.
இந்த இரசமணிக்கு எதையும் கிரகித்துக் கொள்ளும் தன்மை இயற்கையாகவே அமைந்திருப்பதால், நாம் எந்த சத்தை அதற்க்குக் கொடுக்கிறோமோ அதை உள்ளுக்கு இழுத்து பயன் தரும், இதனாலேயே யோக நிலைக்கு சென்று ஞானத்தை அடைய விரும்புபவர்கள், அதைப்பயன்படுத்தி ஞான நிலையை அடைந்தார்கள்.
இவ்வாறு பல அரிய பண்புகளை உள்ளடக்கிய பாதரசத்தை எவ்வாறு மணியாகக் கட்டி பயன்படுத்துகிறோமோ அவ்வாறே அது நமக்கு பலன் அளிக்கும். இதனைக் கட்டும் வழிமுறைகளை நமது சித்தர்கள் பலவாறாக கூறியுள்ளனர். இலகுவான முறை தொடக்கம் மிகவும் கடினமான முறை வரை அவரவர் தங்கள் குரு உபதேசித்ததை , தாங்கள் செய்து அனுபவம் அடைந்ததை அப்படியே ஒளிவு மறைவின்றி மக்கள் அறிந்து பயன் அடையும் விதமாக சொல்லித்தந்துள்ளனர்.
இவ்வளவு பயன்களைக் கொண்ட இந்த இரசமணியைக் கட்டுவது (தயாரிப்பது) எப்படி?
Post a Comment



7 comments:
வைத்தியத்திலும் பயன் படுத்தலாம்,என்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன்
தோழி..உங்கள் தொண்டு தொடரட்டும்..!! வாழ்க..!!
தொடக்கமே நன்றாக உள்ளது.
அன்பின் தோழிக்கு,
மிக அருமையான தகவல்கள்.
தாங்கள் முடிந்தால் அனைத்து தகவல்களையும்
http://medilifeinfo.com மருத்துவ உலகம் எனும் தளத்தில் தங்கள் எழுத்துக்களை பதிய முடியுமா?
நன்றி!
என்றும் அன்புடன்
செல்வ.முரளி
@தோழிshhhhhhhhhhhhhhh
Rasam neelam and manjal nirathil kidaikuma?
Rasathil nangu vahai undu. ..kandupidithu sariyana thagavalgalai idugai seyungal.. .
Rasam neelam and manjal nirathil kidaikuma?
Rasathil nangu vahai undu. ..kandupidithu sariyana thagavalgalai idugai seyungal.. .
Post a Comment