மனிதன் வருகிறான்...!

Author: தோழி / Labels: ,

சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வட ஆர்க்காடு மாவட்டம் வேலூரில் ஜீவ சமாதி அடைந்தவர் ‘தோபா சுவாமிகள்’, அவர் உடம்பில் ஆடையின்றி திகம்பரராய்த் திரிந்த ஒரு சித்த புருஷர். சென்னையிலும், அக்கம்பக்கத்து ஊர்களிலும் அவர் சஞ்சரித்திருக்கிறார்.

ஒருமுறை அவர் சென்னை, திருவொற்றியூரில் ஒரு தெருவோரமாய் அமர்ந்துகொண்டு, வருவோர் போவோரையெல்லாம் அவரவர் குணங்களுக்கேற்ப, “நாய் போகிறது, நரி வருகிறது. கழுதை வருகிறது,பேய் திரிகிறது” என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். இப்படி எல்லோரையும் மிருகங்களாகவும், கீழான பிறவிகளாகவும் வருணித்துக்கொண்டிருந்த தோபா சுவாமிகள் திடீரென, “இதோ மனிதன் வருகிறான்!” என்றார்.

அப்போது அந்த வழியாக வந்தவர் வேறு யாருமல்ல. வடலூர் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் தான்!


Post a Comment

11 comments:

ராமகிருஷ்ணன் த said...

superb

தோழி said...

thanks..

R.Gopi said...

//“நாய் போகிறது, நரி வருகிறது. கழுதை வருகிறது,பேய் திரிகிறது” என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். இப்படி எல்லோரையும் மிருகங்களாகவும், கீழான பிறவிகளாகவும் வருணித்துக்கொண்டிருந்த தோபா சுவாமிகள் திடீரென, “இதோ மனிதன் வருகிறான்!” என்றார்.

அப்போது அந்த வழியாக வந்தவர் வேறு யாருமல்ல. வடலூர் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் தான்! //

படித்ததும் மெய் சிலிர்க்க வைத்தது....

ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், யோகி ராம் சுரத்குமார் இவர்களை பற்றியும் எழுதலாமே...

தோழி said...

நிட்சயமாக இப்போது உள்ளவைகளை பதிந்த பின் மற்ற எல்லோரும் பற்றி தருவேன்

hai_cha70 said...

சித்தர்களுக்கும் பேதமை புத்தியுண்டோ தோழி,,,சொல்

தோழி said...

இது என்ன கேள்வி.. தோழரே

அண்ணாமலை..!! said...

ஆகா..!! அற்புதமான தகவல்..!!
மனிதன் இன்னும் இருக்கின்றானா..??

தோழி said...

மிக்க நன்றி தோழா...

சூர்யா said...

“அருட்பெருஞ் ஜோதி; அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங் கருணை; அருட்பெருஞ் ஜோதி”

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
மனித நேய மாண்பாளர் வள்ளலார் @
http://cyber-mvk.blogspot.com/2009/11/blog-post_14.html

தோழி said...

மிக்க நன்றி...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நல்ல தகவல்..

Post a Comment